சென்னை அம்பத்தூர் அருகே இளைஞர் வெட்டி கொலை - சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சி

x

சென்னை அம்பத்தூர் அருகே இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மண்ணூர்பேட்டை பகுதியில் உள்ள பிரியாணி கடையில் கொரட்டூரை சேர்ந்த, பாலா பிரியாணி வாங்க சென்றதாக கூறப்படுகிறது. அப்போது, அதே கடைக்கு மது போதையில் வந்த மர்ம நபர்களுக்கும், பாலாவிற்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இது கைகலப்பாக மாறிய நிலையில், மர்ம நபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால், பாலாவை தலையில் வெட்டி விட்டு தப்பியோடினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தனிப்படை போலீசார் அஜித், வெங்கட், சங்கர் ஆகிய 3 பேரை கைது செய்தனர்...


Next Story

மேலும் செய்திகள்