தமிழக மக்களே உஷார்...மஞ்சள் எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்

x

கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில் தமிழ்நாட்டில் இன்றைய தினம் வெப்ப அலை வீசுவதற்கான மஞ்சள் நிற எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இன்றும், நாளையும் மிகக் கடுமையான வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் மேற்கு வங்க மாநிலத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கையும், ஒடிசாவிற்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது... உள் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ராயலசீமா, உத்திர பிரதேசம், கடலோர ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஏனாம், மேற்கு வங்கம், சிக்கிம், ஜார்கண்ட், பீகாரில் வரும் 28 ஆம் தேதி வரை வெப்ப அலை வீச கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேற்கு வங்கம் மற்றும் கடலோர ஒடிசாவின் ஒரு சில பகுதிகளில் 5 நாட்களுக்கு மிகக் கடுமையான வெப்ப அலை வீச கூடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்