மகளிர் உரிமைத்தொகை... "கதறினாலும் வேலை நடைபெறவில்லை.." அதிகாரிகளை சாடிய DRO

x

தென்காசி மாவட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள் சரிபார்ப்பு பணிகளில் அலட்சியத்துடன் செயல்படுவதாக கூறி, அதிகாரிகளை மாவட்ட வருவாய் அலுவலர் கடுமையாகச் சாடினார். மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. அதில், கடையநல்லூர் பகுதி விண்ணப்பங்கள் சரிபார்க்கப்படவில்லை எனக் கூறி, அதிகாரிகளை மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி கடுமையாகப் பேசினார். கதறினாலும் வேலை நடைபெறவில்லை என்றும் அவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்