MGR சமாதியை சுற்றிப் பார்க்க வந்த பெண் - போலீஸ் வாகனம் மோதி பலி

x

சென்னையில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா நினைவிடங்களை சுற்றிப்பார்க்க வந்த மூதாட்டி போலீஸ் வாகனம் மோதி உயிரிழந்தார். அம்பத்தூர் பகுதியைச் சேர்ந்த மூதாட்டி மேரி, சென்னை மெரினா கடற்கரைக்கு வந்துள்ளார். மாநில கல்லூரி அருகே காமராஜர் சாலையை கடக்க முயன்றபோது, அந்த வழியாக வந்த ஆயுதப்படை போலீசாரின் டெம்போ வாகனம் மோதி சம்பவ இடத்திலேயே பலியானார். உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிய அண்ணா சதுக்கம் காவல் நிலைய போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்