பாலியல் ஆசை காட்டி இளைஞரிடம் வழிப்பறி

x

தாம்பரம் அருகே, பாலியல் ஆசைகாட்டி இளைஞரிடம் கத்தியை காட்டி மிரட்டி, பணம் மற்றும் செல்போனை பறித்துச் சென்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர். தாம்பரத்தை அடுத்த இரும்புலியூர் சிக்னல் அருகே சேவியர் என்பவர், இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழிக்க சென்றுள்ளார். அப்போது, அங்கு நின்றிருந்த பெண் ஒருவர், சேவியரை ஜாடை காட்டி பாலியல் ஆசைக்கு துண்டியுள்ளார். அதனை நம்பிய சேவியரை, தனியான இடத்திற்கு அழைத்துச் சென்று, கத்திமுனையில் 200 ரூபாய் பணம் மற்றும் செல்போனை அந்தப் பெண் பறித்துச்சென்றார். புகாரின் பேரில் மேரி சுஜாதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்