அறுவடை நேரத்தில் நிலத்தை சூறையாடிய காட்டு யானைகள்..மன உளைச்சலில் விவசாயிகள்

x

நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே நெற்பயிர்களை காட்டு யானைக் கூட்டம் சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 200 ஏக்கரில் நெல் பயிரிட்டுள்ள நிலையில், இரவு நேரத்தில் குட்டியுடன் புகுந்த காட்டு யானைக் கூட்டம், நெற்பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியுள்ளன. அறுவடை நெருங்கும் நேரத்தில் யானைகள் சேதப்படுத்தி உள்ளதால் விவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அம்பை வனத்துறையினர் சம்பவ இடத்தை பார்வையிட்டு சேதங்களை ஆய்வு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்