கேரளாவிலிருந்து தமிழ்நாட்டுக்கு விசிட் கெத்தாக வலம் வரும் காட்டு யானைகள்..பயத்தில் பொதுமக்கள்

x

கோவை மாவட்டம் வால்பாறையில் காட்டு யானைகள் குட்டிகளுடன் சுற்றித்திரிவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வால்பாறையில் கடந்த 4 நாட்களாக மழை பெய்து வருவதால், கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக இடம் பெயர்ந்துள்ளன. வால்பாறை அருகில் உள்ள கெஜமுடி எஸ்டேட், தாய்முடி எஸ்டேட் பகுதிகளில் யானைகள் சுற்றித் திரிந்ததால், தேயிலை பறிக்கும் பணிகள் பாதிக்கப்பட்டன. இதையடுத்து தாய்முடி எஸ்டேட் பகுதியில் முகாமிட்டுள்ள வனத்துறையினர், தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் யானைகள் நுழைந்து விடாதவாறு, தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்