அக்கவுண்டில் விழுந்த ரூ.9000 கோடி யார் பணம்? - சென்னை டிரைவர் பரபரப்பு புகார்

x

தனது வங்கி கணக்கில் 9 ஆயிரம் கோடி செலுத்தப்பட்டது தொடர்பாக, சென்னையை சேர்ந்த கால் டாக்ஸி ஓட்டுனர், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னையில் வசித்து வரும் கால் டாக்ஸி ஓட்டுனரான ராஜ்குமாரின் வங்கி கணக்கில், 9 ஆயிரம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்ட விவகாரம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தநிலையில் ராஜ்குமார், தனது வங்கி கணக்கு தவறாக பயன்படுத்தப்படுவதாக, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். தனது வங்கி கணக்கில் செலுத்தப்பட்ட 9 ஆயிரம் கோடி யாருடையது என்பது குறித்து விசாரிக்க வேண்டுமெனவும், அவர் தனது புகாரில் கோரியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்