என்ன..! இப்படியா தூர் வாருவீங்க..! கால்வாயில் இறங்கி அதிகாரிகளை வெளுத்து வாங்கிய பேரூராட்சி தலைவர்... இணையத்தில் வைரல் வீடியோ

x

குமரி மாவட்ட மக்களின் விவசாய தேவைக்காக அணைகளில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணிர் கால்வாய்கள் வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. அந்த கால்வாய்கள் தற்போது சேறும் சகதியுமாக காட்சி அளிக்கிறது. அதனை தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தூர்வாரும் பணிகளில் ஜேசிபி இயந்திரங்களுடன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அப்போது தேங்கி கிடக்கும் சகதிகளை ஊழியர்கள் சரிவர அகற்றாமல் பணி செய்வதாக கீழ்குளம் பேரூராட்சி தலைவரான கோபாலுக்கு புகார் சென்றது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி தலைவர் கால்வாய்க்குள் இறங்கி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்