திடீரென சிறுவர்கள் செய்த காரியம்.. கொத்து கொத்தாக சிக்கிய மீன்கள்..! மீன்பிடித் திருவிழாவில் பரபரப்பு

x

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த பிச்சம்பட்டியில் உள்ள பெரிய குளத்தில் பல ஆண்டுகளுக்கு பின் நீர் நிரம்பிய நிலையில் அதிக அளவில் மீன்கள் இனப்பருக்கம் செய்திருந்தது. இந்நிலையில் சுமார் 13 ஆண்டுகளுக்கு பின் கிராமக்கள ஒன்றாக இணைந்து மீன்பிடி திருவிழாவை அரங்கேற்றினர். வலையில் விரா, காட்லா என பல வகையான நாட்டு மீன்கள் சிக்கியது. அதேநேரம் சிறிய மீன்களை பலரும் கரையில் போட்டு விடவே அந்த மீன்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை அறிந்த சிறுவர்கள் சிலர் மீண்டும் அந்த மீன்களை குளத்திலேயே எடுத்துப் போட்டது அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது.


Next Story

மேலும் செய்திகள்