"என்ன ஏமாத்திட்டான்" போஸ்டர் ஒட்டிய பெண்கள்..! பரபரத்த நிலக்கோட்டை; கூனி குறுகிய குடும்பம்

x

நிலக்கோட்டை அருகே உள்ள கொங்கபட்டியை சேர்ந்தவர் ரோசன். இவரது பேஸ்புக்கில் பொள்ளாச்சியை சேர்ந்த உஷா என்பவர் அறிமுகமாகி பழகி வந்துள்ளார். இருவரும் தங்களது செல்போன் எண்களை பெற்று, அடிக்கடி பேசி வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் தன்னை காதலிக்க ரோஷனிடம் உஷா வற்புறுத்தியதாகக் கூறிய நிலையில், அவரது செல்போன் எண்ணை ரோஷன் பிளாக் செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உஷா, தனது தோழியான கிருஷ்ணவேணி, சிவாஞானம் மற்றும் சவுந்தரராஜன் ஆகியோர் உதவியோடு, ரோஷனின் தந்தையை தொடர்புகொண்டு, குறிப்பிட்ட தொகையை கொடுக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் மகன் காதலித்து ஏமாற்றியதாகக் கூறி சுவரொட்டி ஒட்டிவிடுவோம் என பணம் பறிக்கும் நோக்கில் மிரட்டியுள்ளனர். இதற்கு சம்மதிக்காததால், இருவரின் புகைப்படத்தை வைத்து காதலித்து ஏமாற்றியதாக வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை உஷா தரப்பினர் பல்வேறு இடங்களில் ஒட்டியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக ரோஷன் தரப்பு அளித்த புகாரின் பேரில், உஷா, கிருஷ்ணவேணி, சிவஞானம் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்