களைகட்டும் கருணாநிதி பொன்விழா.. வெட்டி எடுக்கப்பட்ட மரங்கள்.. அதிர்ச்சியான பொதுமக்கள்..

x

சென்னை சைதாப்பேட்டையில் உள்ள கருணாநிதி பொன் விழா வளைவு புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான பணிகள் முடிவடைந்துள்ளன நிலையில், பனகல் மாளிகை வளாகத்தில் உள்ள மரங்கள் சாலையோரம் வளர்ந்திருந்தன. இது பொன் விழா வளைவின் முழு தோற்றத்தை மறைக்கும்படி அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், பொதுமக்களுக்கு இடையூறாக வளர்ந்துள்ளதால், அந்த மரங்கள் வெட்டப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பொன்விழா வளைவு புதுப்பிக்கும் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்