மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை..உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவு...

x

நடைபாதைகளில் மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகள் செல்ல தடையாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு கம்பங்களை மாற்றியமைக்க கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த பாவனா என்ற மாற்றுத்திறனாளி, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னையில் பல இடங்களில் மாற்றுத் திறனாளிகள் செல்ல முடியாத வகையில் தடுப்பு கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மனுவை விசாரித்த நீதிபதிகள், மனு மீது பதில் அளிக்கும்படி தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்