நடுரோட்டில் 6 அடி உயரத்துக்கு பீறிட்டு அடித்த தண்ணீர் - அதிர்ச்சியான மக்கள்

x

சங்கரன்கோவில் அருகே ராட்ச குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு சென்றதை பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள திருவேங்கடம் முதல் விருதுநகர் வரையிலான கிராமங்களுக்கு, கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத குழாய்கள் பதிக்கப்பட்டு குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் கீழ திருவேங்கடம் அருகே சாலைக்கு அடியில் இருந்த ராட்சத குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் பீறிட்டு அடித்தது. சாலையை உடைத்துகொண்டு தண்ணீர் ஆறடி உயரத்துக்கு சென்றதை மக்கள் வேடிக்கை பார்த்தனர். இதுபோல அடிக்கடி நடைபெறும் உடைப்புகளை ஆராய்ந்து சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்