வாக்காளர் அட்டையை காணவில்லையா..? "மீண்டும் ஒரு வாய்ப்பு" - வந்தாச்சு புது அறிவிப்பு

x

மழை வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டையை தவறவிட்டவர்கள் மீண்டும் விண்ணப்பித்து புதிய அட்டையை பெற்றுக்கொள்ளலாம் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள், இணையதளம் வாயிலாக, கட்சியின் செலவின அறிக்கைகள் தாக்கல் செய்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை ரிப்பன் மாளிகையில் சத்யபிரதா சாஹு தலைமையில் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹு, திட்டமிட்டபடி வரும் ஜனவரி 5-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட மக்கள், மழை வெள்ளத்தில் வாக்காளர் அடையாள அட்டையை தவறவிட்டிருந்தால், வாக்குச்சாவடி அலுவலர் அல்லது தேர்தல் ஆணைய இணையதளத்தில் விண்ணப்பித்து, புதிய அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம் என சத்யபிரதா சாஹு


Next Story

மேலும் செய்திகள்