"வேறு கட்சிக்கு வாக்களித்ததால் கொலை.."அண்ணாமலைக்கு ஆப்பு அடித்த பதிவு... | Annamalai | BJP

x

கடந்த 19ஆம் தேதி, கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே பக்கிரிமணியம் கிராமத்தில் கோமதி என்ற பெண் கொலை செய்யப்பட்டார். தேர்தலில் ஒரு தரப்பினருக்கு ஆதரவாக வாக்களித்ததால், ஆத்திரத்தில் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியது. இந்த சம்பவம், இருதரப்பினருக்கும் இடையே வழக்கை வாபஸ் பெறுவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக நடந்ததாகவும், வழக்கு தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில், சமூக வலைதளங்களில் தவறான கருத்தை பரப்பிய சின்ஹா என்பவர், ரோஷன் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் கருத்துப் பரப்பியது தெரியவந்தது. மேலும், கடலூரைச் சேர்ந்த ஹரி பிரபாகர் மற்றும் சண்முகம் ஆகியோரும் தவறான தகவலை பரப்பியது தெரியவந்ததால், 3 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்