தொடங்கி வைத்த கைப்பந்து போட்டியால்.. சர்ச்சையில் சிக்கிய VC

x

ஆஞ்சியோ சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படும் துணைவேந்தர் ஜெகநாதன், விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தொடங்கி வைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சார்பில், தென்மண்டல பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான மகளிர் கைப்பந்து போட்டியை துணைவேந்தர் ஜெகநாதன், மாணவிகளுடன் விளையாடி தொடங்கி வைத்ததாக கூறப்படுகிறது. தனது உடல் நிலையை காரணம் காட்டி, நீதிமன்ற பிணையில் உள்ள நிலையில், ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு ஓய்வில் இருப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், துணை வேந்தர், எப்படி ஓடி ஆடி விளையாட முடியும் என்ற கேள்வி எழுந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்