"விசாகா குழு.." - உயர்நீதிமன்றம் அதிரடி

x

விளையாட்டு சங்கங்களில் அதிகாரத்தைப் பிடிக்க நடக்கும் மோதல்கள், வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் அமர்வு,தமிழ்நாடு கால்பந்து சங்கத்தின் நிர்வாகத்தை கவனிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளனர். இந்த குழு, சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டத்தைக் கூட்டி, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, நிர்வாகிகள் தேர்தலை நடத்த வேண்டும் எனவும், அதற்கு முன், தகுதியான வாக்காளர் பட்டியலை தயாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர். விளையாட்டு சங்கங்களில் அதிகாரத்தைப் பிடிக்க நடக்கும் மோதல்கள் வீரர்களையும் பாதிக்கச் செய்கிறது என வேதனை தெரிவித்துள்ளனர். வீரர்கள் தேர்வில் எந்த பாரபட்சமும் காட்டக்கூடாது என அறிவுறுத்திய நீதிபதிகள், விசாகா குழுக்களை அமைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்