கெத்தாக துரத்தி வந்த யானையை திரும்பி பார்க்காமல் ஓட விட்ட ஓட்டுநர் - வைரல் வீடியோ

x

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் நடமாடுகின்றன. இந்த நிலையில் பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடா செல்லும் வனச்சாலையில் வனத்துறையினரின் ஜீப் வாகனம் சென்றபோது ஆண் காட்டு யானை ஒன்று, வனத்துறையின் வாகனத்தை துரத்த முற்பட்டது. அப்போது ஜீப் ஓட்டுநர் லாவகமாக வாகனத்தை இயக்கியதால் காட்டு யானை, வாகனத்தை கண்டு அஞ்சியபடி பின்னோக்கி ஓடி வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இந்த காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது


Next Story

மேலும் செய்திகள்