நிச்சயமான பெண் வேறொருவருடன் திருமணம்.."வீட்ல எதையும் சொல்லிராத மச்சான்" - இளைஞரின் இறுதி கதறல்

x

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர், மாலத்தீவில் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவருக்கும், ராணிப்பேட்டையை சேர்ந்த பெண்ணுக்கும் இடையே கடந்த பிப்ரவரி மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. வரும் ஏப்ரல் மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில், மாலத்தீவில் பணியாற்றி வந்த ராஜேஷ், தன் வருங்கால மனைவிக்கு செல்போன், லேப்டாப் போன்றவற்றை அன்பளிப்பாக வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. இதனிடையே, திருமணத்திற்கு இன்னும் ஒரு சில வாரங்களே இருந்த நிலையில், ராஜேஷ்க்கு போன் செய்த இளம்பெண், தான் ஏற்கனவே ஒருவரை காதலித்து வருவதாகவும், அவரையே திருமணம் செய்யப்போவதாகவும் கூறி போனை துண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த ராஜேஷ், தனது நண்பருக்கு உருக்கமாக பேசி வாட்ஸ் அப் ஆடியோ ஒன்றை அனுப்பிவிட்டு, மாலத்தீவில் தற்கொலை செய்து கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்