கண்ணிமைக்கும் நொடியில் அரங்கேறிய பயங்கரம்...துடிதுடித்த உயிர்கள்...சாலையில் ரத்தவெள்ளம்

x

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னையில் இருந்து தைலாபுரம் நோக்கி சென்ற போது கிளியனூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சென்டர் மீடியனில் மோதிய நிலையில், எதிரே வந்த கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது.இந்த விபத்தில் தெலங்கானாவை சேர்ந்த ஒரு பெண் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்