ஒரு ஊரே பேசி பெண்ணை ஒதுக்கிய கொடூரம்...கண்ணீர் மல்க வெளியான வீடியோ

x

ராசிபுரம் அருகே 2 பெண்கள் உட்பட 4 பேரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. நாமக்கல் மாவட்டம் முள்ளுகுறிச்சி காமராஜ்நகர் பகுதியைச் சேர்ந்த பூங்கொடி கணவரை பிரிந்த நிலையில் அவரது சகோதரி தங்கமணி உடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில், அரசு புறம்போக்கு நிலத்தில் பூங்கொடி வீடு கட்டி வருவதாக தெரிகிறது. இதனிடையே அவர் வீடு கட்டிவரும் நிலத்திற்கு மேல் செல்லும் மின்சார வயரை மாற்றுவதில் ஏற்பட்ட தகராறில், தனது குடும்பத்தை ஊர் பஞ்சாயத்து ஒதுக்கி வைத்துள்ளதாக பூங்கொடி கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்