கடைசியாக ஒரு தடவை மகள் முகத்தை பார்த்து உருகிய விஜய் ஆண்டனி... கரைந்து அழுத மனைவி -இறுதி நொடி காட்சி

x

12-ம் வகுப்பு படித்து வந்த விஜய் ஆண்டனியின் மகள் மீரா, நேற்று அதிகாலையில் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூறாய்வுக்கு பின், இறுதி அஞ்சலிக்காக ஆழ்வார்பேட்டையில் உள்ள விஜய் ஆண்டனி இல்லத்தில் வைக்கப்பட்டது. மீராவின் உடலுக்கு திரை பிரபலங்கள், பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், சக மாணவர்கள் என பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து இன்று காலையில், சென்னை நுங்கம்பாக்கம் புனித தெரசா தேவாலயத்தில் மீராவின் உடலுக்கு சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தேவாலயத்தில் மீராவின் புகைப்படம் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, அவரது உடல் மீது புனித நீர் தெளித்து பிரார்த்தனை நடைபெற்றது. இதில், விஜய் ஆண்டனியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் மீராவின் பள்ளி நண்பர்கள் பங்கேற்று கண்ணீர் மல்க பிரார்த்தனை மேற்கொண்டனர்..


Next Story

மேலும் செய்திகள்