வேங்கை வயலில் பரபரப்பு... போலீசார் குவிப்பு - ஊரைச்சுற்றி கடும் பாதுகாப்பு

x

பறையர் சங்கத்தின் சார்பில், வேங்கைவயல் கிராமத்தில் இருந்து சென்னை கோட்டை நோக்கி நடைபயணம் செல்லப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதில், வேங்கைவயல் விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை காவல்துறையினர் இதுவரை கைது செய்யாததைக் கண்டித்தும், பறையர் சமூகத்திற்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்து இந்த நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்த விவகாரம் அறிந்து, வேங்கை வயல் கிராமத்தில் 250க்கும் மேற்பட்ட காவல்துறையினர், வஜ்ரா வாகனங்களுடன் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். திருமயம் பகுதியில் காவல்துறையினர் நடத்திய வாகன தணிக்கையில், பேரணியின் ஒருங்கிணைப்பாளரான சக்திவேல் என்பவர், தனது ஆதரவாளர்களுடன் வேங்கைவயல் கிராமத்திற்கு வாகனத்தில் வந்தபோது தடுத்து நிறுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்களை கைது செய்த போலீசார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்