நடுரோட்டில் ரத்தம் சொட்ட சொட்ட டெலிவரி பாயை தாக்கிய இளைஞர்கள் - வேலூரில் அதிர்ச்சி

x

வேலூரில், உணவு டெலிவரி செய்யும் இளைஞரை, மதுபோதையில் சரமாரியாக தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.


வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூரை சேர்ந்த திருமலை வாசன் என்பவர், சொமேட்டோவில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார்.


காட்பாடி அடுத்த காங்கேயநல்லூர் செல்லும் பகுதியில், உணவு டெலிவரி செய்துவிட்டு திரும்பியுள்ளார்.


அப்போது மதுபோதையில், இருசக்கர வாகனத்தில் வந்த அதே பகுதியை சேர்ந்த பார்த்திபன், தணிகாச்சலம் ஆகிய இருவர், திருமலைவாசனின் இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளனர்.


அதனை தட்டிக்கேட்ட திருமலைவாசனை, இருவரும் சேர்ந்து கண்மூடித்தனமாக தாக்கியதில், படுகாயமடைந்த அவர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்து, பார்த்திபன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


மேலும், திருமலைவாசன் சுய நினைவு இல்லாமல் மீட்கப்படும் வீடியோ காட்சி வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்