சென்னையில் இருந்து வெள்ளியங்கிரி சென்றவருக்கு நேர்ந்த சோகம்...நடு இரவில் துடிதுடித்த உயிர்

x

கோவை வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது மேலும் ஒரு பக்தர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவருடன் சேர்த்து இந்த ஆண்டு 5 பக்தர்கள் வெள்ளியங்கிரி மலையேற்றத்தின் போது உயிரிழந்துள்ளனர்.

சென்னை முகப்பேரைச் சேர்ந்த ரகுராம் என்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த 29ந்தேதி சென்னையில் இருந்து தனது நண்பர்கள் 15 பேருடன் புறப்பட்டு கோவை வந்த நிலையில், பூண்டி வெள்ளியங்கிரி மலையில் நேற்று இரவு 9 மணியளவில் ஏறத் துவங்கியுள்ளார்... அதிகாலை இரண்டரை மணியளவில் அவர் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிய நிலையில், உடனடியாக நண்பர்கள் அடிவாரத்தில் உள்ள பாரம் தூக்கும் டோலி தொழிலாளர்களை வர வைத்து காலை 4 மணியளவில் மலையடிவாரத்திற்குக் கொண்டு வந்தனர்... அவரை அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ரகுராம் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்... போலீசார் இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்