பக்தர்கள் சென்ற வேன் மரம் மீது மோதி பயங்கர விபத்து - 15 பேருக்கு நேர்ந்த கதி

x

பக்தர்கள் சென்ற வேன் மரம் மீது மோதி பயங்கர விபத்து - 15 பேருக்கு நேர்ந்த கதி

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்காடு சாலையில் மேல்மருவத்தூர் பக்தர்கள் சென்ற வேனானது அரசு கலைக்கல்லூரி எதிரே சாலையில் உள்ள மரத்தின் மீது மோதி விபத்திற்குள்ளானதில் 15 பேர் காயமடைந்தனர்... குடியாத்தம் பகுதியில் இருந்து புறப்பட்ட பக்தர்கள் விபத்தில் காயமடைந்த நிலையில், அவர்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்... இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆற்காடு சாலையில் புளியமரம் உள்ள பகுதியில் அடிக்கடி விபத்துகள் நிகழ்வதால், மரத்தை இடமாற்றம் செய்ய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்