வந்தே பாரத் ரயிலால் வைகை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம் | Vande Bharat Train | Vaigai Superfast Express

x

மதுரை - சென்னை இடையே வைகை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வைகை எக்ஸ்பிரஸ் இதுவரை காலை 7.10க்கு மதுரையிலிருந்து புறப்பட்டு, மதியம் 2.30க்கு சென்னை வந்தடையும். இந்நிலையில், நெல்லை-சென்னை இடையே வந்தே பாரத் ரயில் இயக்கப்படுவதால், வைகை எக்ஸ்பிரஸ் ரயில், மதுரையில் காலை 6:40 மணிக்கு புறப்பட்டு, மதியம் 2.10-க்கு சென்னை வந்தடையும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மதுரையில் இருந்து வைகை ரயில் புறப்படும் நேரம் மட்டுமே மாற்றப்பட்டுள்ளதாகவும், சென்னையிலிருந்து புறப்படும் நேரத்தில் மாற்றமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்