3 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண்- உடனே நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு

x

தேனி அருகே நடந்த கொலை முயற்சி வழக்கில், 3 ஆண்டுகளாக தேடப்பட்டு வந்த 3 பேர், உசிலம்பட்டி மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

பெரியகுளத்தை அடுத்த பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரை, கடந்த 2019ஆம் ஆண்டு மர்மகும்பல் அரிவாள் மற்றும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது. இந்த வழக்கில் போலீசார் மர்மநபர்களை தேடி வந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், சின்னடொர்ரி என்ற குமரேசன், பாஸ்கரன் ஆகிய 3 பேர், நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அதனைத் தொடர்ந்து 3 பேரையும், நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்