அறியாமல் வேறு பாதையில் வந்த மதுரை ஆதீனம்.. அவசரமாக தடுத்து நிறுத்திய போலீஸ்

x

சிவகங்கை காளையார் கோயிலில் மருது சகோதரர்கள் குருபூஜை விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்த மதுரை ஆதீனம் வருகை தந்தார். ஆனால், அவர் வந்த பாதையில் நடந்து செல்ல மட்டுமே அனுமதி உள்ளதாகவும், வாகனத்தில் செல்ல வேண்டுமென்றால் மாற்றுப் பாதையில் செல்லுமாறும் காவலர்கள் அறிவுறுத்தினர். போலீசார் அனுமதிக்காத நிலையில், அங்கிருந்து கிளம்பும் முன், பணியில் இருந்த காவலர்களுக்கு தான் கொண்டு வந்திருந்த திருநீறு பூசி ஆசீர்வாதம் செய்து விட்டு மாற்றுப்பாதை வழியாக சென்று மருது சகோதரருக்கு மரியாதை செலுத்தி சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்