பிரச்சாரத்தில் கண்ட காட்சி.. அசந்துபோன அமைச்சர் உதயநிதி

x

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் அமைச்சர் உதயநிதி நாளை (மார்ச் 29) அடுத்தக்கட்ட பிரச்சாரத்தை தொடங்குகிறார்...

இது தொடர்பாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில உரிமைகளை மீட்க கடந்த 23ஆம் தேதி இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பிரச்சார பயணத்தை தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பல்வேறு தொகுதிகளுக்கு சென்றபோது, பாசிஸ்ட்டுகளுக்கும், அடிமைகளுக்கும் எதிரான மக்கள் அலை வீசுவதை காண முந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட சுற்றுப்பயணத்தை திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பொன்னேரியில் வரும் 29 ஆம் தேதி தொடங்க இருப்பதாக அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்