கோயிலில் சிகரெட் பிடித்த‌ இருவர்.. தட்டிக்கேட்டவரை கத்தியால் தாக்கி எஸ்கேப் - உளுந்தூர்பேட்டையில் பரபரப்பு

x

உளுந்தூர்பேட்டை அருகே கோயிலில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த‌தை தட்டிக்கேட்ட இளைஞரை, 2 பேர் கத்தியால் குத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள உளுந்தண்டார்கோயில் பகுதியை சேர்ந்த சற்குணராஜ், அருகில் உள்ள கோயிலில், அதே கிராமத்தை சேர்ந்த ஈஸ்வரன், அவரது தம்பி ராமகிருஷ்ணன் ஆகியோர் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த‌தை தட்டிக் கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஈஸ்வரனும், ராமகிருஷ்ணரும் கத்தியால் சற்குணராஜை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடியதாக கூறப்படுகிறது. படுகாயமடைந்த சற்குணராஜுக்கு உளுந்தூர்பேட்டை மருத்துவனையில் முதல் உதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில், கத்தியால் குத்திவயர்களை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினரிடமும் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, 3 பேரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் கூறியதை அடுத்து, கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்