திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தபாஸ் ராய் ராஜினாமா - வெளிவந்த முக்கிய தகவல்

x

திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ தபாஸ் ராய் ராஜினாமா - வெளிவந்த முக்கிய தகவல்

மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் தபாஸ் ராய் கட்சியில் இருந்து விலகினார். சந்தேஷ்காளி பகுதியில் பழங்குடி பெண்களை திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரை அரசு முறையாக கையாளவில்லை என குற்றம்சாட்டியிருந்த அவர், அமலாக்கத்துறை சோதனையின் போது, கட்சித் தலைமை தனக்கு துணை நிற்கவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தினார். இதனால் கட்சியில் இருந்து விலகியுள்ள தபாஸ் ராய், எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்தார். இவரது முடிவு திரிணாமுல் காங்கிரஸ்க்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்