பஸ் சீட் உடைந்து நடுரோட்டில் விழுந்த நடத்துநர் - உடனே நடந்த அதிரடி

x

திருச்சியில் ஓடும் பேருந்தில் இருந்து இருக்கை உடைந்து விழுந்த விவகாரத்தில், பணிமனை மேலாளர் உள்பட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். நேற்று, திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்ற பேருந்தின் இருக்கை உடைந்து வெளியே விழுந்ததில், பேருந்து நடத்துநர் படுகாயமடைந்தார். இச்சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், போக்குவரத்து கழக பொது மேலாளர் முத்துகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்தில் இன்று ஆய்வு செய்தனர். இதைத் தொடர்ந்து, பேருந்தை முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறி, அரசுப் போக்குவரத்து கழக தீரன் நகர் கிளை பணிமனை மேலாளர் ராஜசேகர் உள்பட மூன்று பேரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்