நர்சிங் மாணவிக்கு கருக்கலைப்பு.. உதிரப்போக்கு அதிகமானதால் உயிரிழத்த சிறுமி? - பின்னணியில் சிக்கிய காதலன்..

x

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி பகுதியைச் நர்சிங் கல்லூரி மாணவி, பெற்றோரை இழந்த நிலையில், பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார். காந்திகிராம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில், விடுதியில் தங்கி நர்சிங் படித்து வந்தார். சிறுமியின் உடலில் மாற்றங்கள் இருப்பதை அறிந்த உறவினர் ஒருவர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தபோது, கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக சிறுமியிடம் விசாரித்தபோது, அம்பாத்துறை பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவரை சிறுமி காதலித்து வந்ததும், இருவரும் நெருக்கமாக பழகி வந்ததும் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து உறவினர், திருச்சி உறையூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து சிறுமியின் கர்ப்பத்தை கலைத்துள்ளார். ஆனால் பல மணி நேரமாகியும் உதிரப்போக்கு மற்றும் மூச்சு திணறல் நிற்காததால், சிறுமி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், காதலன் ராம்குமார், கர்ப்பத்தை கலைக்க முயற்சி செய்த அவரது உறவினர் மற்றும் தனியார் மருத்துவமனை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்