16 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் சேவை... சென்னையில் இருந்து வந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு
16 ஆண்டுகளுக்குப் பிறகு ரயில் சேவை... சென்னையில் இருந்து வந்த ரயிலுக்கு உற்சாக வரவேற்பு
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் 16 ஆண்டுகளுக்கு முன்பு மீட்டர் கேஜ் ரயில் சேவை நிறுத்தப்பட்ட நிலையில், அகல ரயில் பாதை பணிகள் முடிந்து ரயில்கள் மீண்டும் ரயில்கள்
இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ரயில்சேவை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ரயில் உபயோகிப்பாளர்கள் சங்கம் மற்றும் வர்த்தக சங்கத்தினர் நகரின் முக்கிய
வீதிகள் வழியாக ஊர்வலமாக ரயில் நிலையம் நோக்கி சென்றனர். அங்கு ஆந்திரப் பகுதியில் இருந்து சென்னை வழியாக அறந்தாங்கிக்கு வந்த ரயிலை அவர்கள் வரவேற்று, ரயில்
பயணிகளுக்கு இனிப்பு வழங்கி, ராமேஸ்வரத்துக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story