நடுக்கடலில் விபரீதம்... கூடங்குளம் அணு மின்நிலையம் அருகே பரபரப்பு

x

கூடங்குளம் அணு மின்நிலையத்திற்காக புதிதாக 2 நீராவி என்ஜின்கள் ரஷ்யாவில் இருந்து வரவழைக்கப்பட்டது. இதனை சுமந்து வந்த மிதவை கப்பல் கடந்த 8ம் தேதி கரை தட்டியது. பல்வேறு முயற்சிகள் எடுத்தும் கப்பலை மீட்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மிதவை கப்பலில் உள்ள 2 நீராவி என்ஜின்களை மட்டும் மீட்க முடிவெடுக்கப்பட்டு, கடற்கரையில் இருந்து கப்பல் வரை ரோடு போடும் பணி தொடங்கியுள்ளது. இதனை கூடங்குளம் அணுமின் நிலையமும், தனியார் ஒப்பந்த நிறுவனமும் இணைந்து செயல்படுத்தி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்