பால் வண்டியை ரிட்டன் அனுப்பிய வியாபாரிகள் - மதுரையில் பரபரப்பு

x

மதுரை ஆவின் பண்ணையில் இருந்து தாமதமாக எடுத்துவரப்பட்ட பாலை, திருப்பி அனுப்பும் போராட்டத்தில் டெப்போ முகவர்கள் ஈடுபட்டனர். பால் பாக்கெட்டுகளை தாமதமாக விநியோகம் செய்வதால் வியாபாரம் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்த அவர்கள், கொள்முதல் பணத்தை தாமதமாக வாங்க ஆவின் நிர்வாகம் மறுப்பதாக குற்றம்சாட்டினர். இது குறித்து முறையிட்டால், அதிகாரிகள் அவர்களுக்குள்ளே மாறி மாறி குறை கூறுவதாக டெப்போ முகவர்கள் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்