கைதியின் மனைவிக்கு விடாமல் டார்ச்சர்..! - சிக்கிய 'சில்மிஷ' வார்டன்... சேலத்தில் பரபரப்பு

x

திருட்டு வழக்கு ஒன்றிற்காக, நாமக்கல்லை சேர்ந்த ஒருவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரை பார்க்க அவரது மனைவி சிறைக்கு வந்தபோது, அங்கு வார்டனாக பணிபுரிந்த விஜயகாந்த் என்பவர், அந்தப் பெண்ணிடம், உதவி செய்வது போல் நைசாக பேசி செல்போன் எண் வாங்கியுள்ளார். பின்னர், அந்தப் பெண்ணின் வாட்ஸ் அப் எண்ணிற்கு தொடர்ந்து போன் செய்து ஆபாசமாக பேசி வரவே, ஆத்திரமடைந்த பெண் சிறை அதிகாரிகளிடம் புகார் அளித்தார். அதன் பேரில் அதிகாரிகள் வார்டனி​ன்​ செல்போன் எண்ணை வைத்து பரிசோதனை செய்தில், வார்டன் விஜயகாந்த் பெண்ணிடம் ஆபாசமாக பேசியது அம்பலமானது. அதனைத் தொடர்ந்து, வார்டன் விஜயகாந்தை சஸ்பெண்ட் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்