கற்களால் உடலை கிழித்து... 3 சிறுவர்கள் த*கொலை முயற்சி..! அரசு கூர்நோக்கு இல்லத்தில் அதிர்ச்சி

x

திருச்சி இபி ரோட்டில் உள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் மூன்று சிறார்கள், மின்விசிறி, டிவி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. பின்னர் மூவரும், சிறிய கற்களால் தங்களது உடலை கிழித்துக்கொண்டு, தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக கூர்நோக்கு இல்ல கண்காணிப்பாளர் பிரபாகரன், காவல்நிலையத்தில் புகாரளித்தார். இதனையடுத்து 3 சிறார்கள் மீதும் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு செய்யப்பட்டதோடு, இந்த சம்பவம் தொடர்பாக சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் மூவரும், மதுரை கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்