டோக்கன் விநியோகம் தொடக்கம்.. லைனில் நின்று வாங்கிய மக்கள்

x

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில், வெள்ள நிவாரணத்தொகைக்கான டோக்கன் விநியோகம் தொடங்கியது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. குன்றத்தூர் வட்டத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும், ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் மேவளூர்குப்பம், கச்சிப்பட்டு, சிவன்தாங்கல் உள்ளிட்ட வருவாய் கிராம பகுதிகளில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு பகுதியில், பொதுமக்கள் வரிசையில் நின்று தங்கள் குடும்ப அட்டைகளை காண்பித்து டோக்கன்களை பெற்றுச் சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்