சென்னை நகருக்குள் அரசு சட்டக் கல்லூரி.. தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு | TN Govt

x

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கிவந்த டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியை இரண்டாக பிரித்து, அதே பெயரில், திருவள்ளூர் மாவட்டம் பட்டறை பெரும்புதூரிலும், காஞ்சிபுரம் மாவட்டம் புதுப்பாக்கத்திலும் செயல்பட்டு வருகின்றன. இதை எதிர்த்த வழக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரியை பிரித்து இரு மாவட்டங்களில் வைத்துள்ளதால், மாணவர்கள் பயிற்சிக்கு வந்துசெல்ல முடியாமலும், மூத்த வழக்கறிஞர்களின் விரிவுரைகளை கேட்க முடியாமலும் பாதிக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். அதனால் சென்னை நகருக்குள் சட்டக்கல்லூரி அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்வது குறித்து விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஏப்ரல் 12க்கு தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்