மக்களே.. அருமையான வாய்ப்பு "வரும் பிப்.29-க்குள்.." தமிழக அரசு அதிரடி

x

அனுமதியற்ற மனைப்பிரிவுகளை

வரன்முறைப்படுத்த வரும் 29ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதன் மூலம், 2016 அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு, பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் உள்ள விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத மனைப் பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்கலாம் என்றும், இதற்கான விண்ணப்பத்தை இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறை செய்துகொள்ள கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளதால், இந்த இறுதி வாய்ப்பினை தவறாமல் பயன்படுத்தி கொண்டு வரும் 29 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறும் தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்