சென்னை தி.நகரில் அதிர்ச்சி சம்பவம்

x

சென்னையில் 23 ஆயிரம் அமெரிக்க டாலரை நூதன முறையில் ஏமாற்றி மோசடி செய்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் பிரிக்கிலின் தெருவை சேர்ந்த பிரதீக் வக்காரியா என்பவர் Foreign Money exchange நிறுவனம் நடத்தி வருகிறார். அவரிடம் அடையாளம் தெரியாத நபர் தொடர்பு கொண்டு தனக்கு 23 ஆயிரம் அமெரிக்க டாலர் தேவை என்றும், அதற்கான இந்திய பணத்தை தந்து விடுவதாகவும் தெரிவித்துள்ளார். இதனை நம்பிய பிரதீக் வக்காரியா சென்னை தி நகர் நரசிம்மன் சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று அங்கு காத்திருந்த நபரிடம் அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளார். இந்திய பணத்தை எடுத்து வருவதாக கூறி சென்ற அந்த நபர் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரதீக் வக்காரியா போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மோசடி நபரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்