பாக்கியைக் கேட்ட உரிமையாளர்... குடும்பத்துடன் கொல்ல முயற்சி செய்த நபர் - திருப்பூர் அருகே பரபரப்பு

x

திருப்பூர் மாவட்டம் ஆலுத்து பாளையத்தை சேர்ந்த மணிராஜ், வடுகபாளையம் புதூரைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரின் மில்லில் கடந்த 12 வருடங்களாக மேலாளராக பணிபுரிந்தார். மணிராஜ் சொந்தமாக விசைத்தறி வைத்து சந்திரசேகரின் மில்லில் இருந்து நூல் வாங்கி அதை துணிகளாக நெய்து கொடுத்துள்ளார். ஒரு வருடமாக மணிராஜூக்கு 42 லட்சம் ரூபாய் கூலிப்பணத்தை தராமல் சந்திரசேகர் பாக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிராஜ் கடந்த மார்ச் 1ம் தேதி மேலாளர் பணியில் இருந்து விலகியுள்ளார். தன்னிடம் வாங்கிய நூல் உள்ளிட்ட 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களைத் திருப்பித் தருமாறு சந்திரசேகர், மணிராஜிடம் கேட்டுள்ளார். முதலில் கூலித்தொகையை தருமாறு மணிராஜ் கூறியுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த சந்திரசேகர், அடியாட்களுடன் மணிராஜ் வீட்டிற்குச் சென்று வாகனம் மூலம் கதவை உடைத்துள்ளார். இதில் மணிராஜும், அவரது குடும்பத்தினரும் காயமடைந்தனர். புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்