10ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் திடீர் மாயம்.. நிலைகுலைந்த 3 குடும்பம்.. பதற்றத்தில் திருப்பூர்

x

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த வெள்ள கோவில் அறிஞர் அண்ணா மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு மாணவிகள் 3 பேர் மாயமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை பெண்கள் விடுதியில் தங்கிப் படித்து வந்த இருமாணவிகள் மற்றும், வெள்ள கோவில் நடேசன் நகர்ப் பகுதியில் பெற்றோருடன் இருந்தபடி, வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்று வந்த மாணவி ஒருவர் என 3 மாணவிகள் வழக்கம்போல் பள்ளி முடித்து விட்டு விடுதி மற்றும் வீட்டிற்குத் திரும்பிச் செல்லவில்லை. 3 மாணவிகளும் திடீரென மாயமான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... போலீசார் காணாமல் போன மாணவிகளைத் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்