மீண்டும் பயணத்தை தொடங்கிய திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்...உற்சாகமாக பயணம் செய்யும் பயணிகள்

x

கனமழை வெள்ளத்தால் கடந்த 17ஆம் தேதி முதல் நெல்லை, திருச்செந்தூர் வழித்தடங்களில் ரயில்களின் இயக்கம் தடைபட்டு, தொடர்ந்து பராமரிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதையடுத்து, பணிகள் முடிந்து சோதனை ஓட்டமும் நடைபெற்றது. இந்நிலையில், திருச்செந்தூர் விரைவு ரயில் தனது சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. அதன்படி, திருச்செந்தூரில் இருந்து இரவு எட்டு 25 மணிக்கு சென்னைக்கு செந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுள்ளது. மேலும், நாளைய தினம் முதல் வழக்கமான ரயில் சேவை திருநெல்வேலி, திருச்செந்தூர் வழித்தடத்தில் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருச்செந்தூரில் இருந்து காலை 7 முப்பது மணிக்கு புறப்படும் ரயில் மட்டும் நாளைய தினம் ரத்து செய்யப்பட்டுள்ளதுhttps://youtu.be/rPXAEgEOs7M


Next Story

மேலும் செய்திகள்