போக்சோ வழக்கில் ஆஜராகாமல் டிமிக்கி.. 2 இன்ஸ்பெக்டர்களுக்கு ஆப்பு வைத்த கோர்ட்

x

சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாத காவல் ஆய்வாளர்கள் இருவருக்கு, அதிரடியாக பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

vovt

சிவகங்கை மாவட்டம் கோவிலூர் பகுதியை சேர்ந்த சிறுமிக்கு, பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணை, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த காவல் ஆய்வாளர் ரவீந்திரனுக்கு, நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. அதேபோல், சாக்கோட்டை பகுதியை சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணைக்கு, ஆஜராகாத காவல் ஆய்வாளர் ஜாக்குலினுக்கும், போக்சோ சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்