மர்ம முறையில் இறந்த புலி..! வனத்துறை அதிகாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் கொத்தமங்கலம் அருகில் கடந்த 2 தினங்களுக்கு முன்பு வறண்ட நீரோடையில் உடல் அழுகிய நிலையில் புலி இறந்து கிடப்பதைக் கண்டு வனத்துறையினர் கண்டறிந்தனர். இதை தொடர்ந்து புலியின் இறப்புக்கான காரணத்தை அறிய புலியின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஹைதராபாத் உயிரியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வின் முடிவில் புலியின் கழுத்து பகுதியில் சுருக்கு கம்பியில் சிக்கி இறந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக பவானிசாகர் அருகே உள்ள சுஜில்குட்டை, புங்கார் காலனி பகுதியைச் சேர்ந்த ஏழு பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்ததில் வனப்பகுதியில் மான்களை வேட்டையாட சுருக்கு கம்பி வைத்ததாகவும், அதில் புலி சிக்கி இறந்ததையும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் மீது வன குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்