"போகாத ஊருக்கு டிக்கெட்" - நடத்துநரிடம் தகராறு செய்த போதை ஆசாமி - பஸ்சில் நடந்த அடிதடி...

x

"போகாத ஊருக்கு டிக்கெட்" - நடத்துநரிடம் தகராறு செய்த போதை ஆசாமி - பஸ்சில் நடந்த அடிதடி...

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில், பேருந்து செல்லாத இடத்திற்கு டிக்கெட் கேட்டு, மதுப்பிரியர் ஒருவர் நடத்துநரிடம் தகராறில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அரசு பேருந்து, காரவள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது மதுப்பிரியர் ஒருவர்,

பேருந்து செல்லாத இடத்திற்கு பயணச்சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நடத்துநரை தாக்கியுள்ளார். நடத்துநரும் மதுப்பிரியரை தாக்க, அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, தகவலறிந்து வந்த போலீசார், மதுப்பிரியரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்